முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி டாஸ்மாக் கடையில் 1.86கோடி கையாடல் சிபிசிஐடி விசாரணை நடத்த ஏஐடியுசி கோரிக்கை!

ஷ்யாம் நியூஸ்

26.09.2020

தூத்துக்குடி  டாஸ்மாக் கடையில் 1.86கோடி கையாடல் சிபிசிஐடி விசாரணை நடத்த ஏஐடியுசி கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் டாஸ்மாக் கடையில் அதிக வருவாய் உள்ள கடைகளில் ஒன்று ஆறுமுகநேரியில் உள்ள 9991 எண் கடையாகும் .இந்த கடைக்கு பணிபுரியவேண்டும் என பல பணியாளர் போட்டி போட்டுக்கொண்டு கையூட்டு கொடுத்து அதிகாரிகளுடன் துணையோடு பணியாற்றி வந்தனர்.இந்த கடையில் தினமும் 7லட்சம் வரை மது விற்பனை நடைபெறும்.விற்பனை  பணத்தை மருநாள் வங்கியில் செலுத்தி வரவேண்டும்.மற்றும் ஒவ்வொரு மாதமும் தணிக்கை செய்யும் அதிகாரிகள் தணிக்கை செய்து சான்று வழங்குவர்.இந்த நிலையில் 31.08 2020 தணிக்கை செய்த அதிகாரிகள் கடை இருப்பு மதுபாணத்திற்க்கும் வங்கியில் செலுத்திய மதுபாண விற்பனை பணத்திற்க்கும் 1.86கோடி வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அந்த கடையின் ஊழியர் ஒருவர் தற்கொலைக் முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .மற்றோருவர் டாஸ்மாக் மேலாளர் துணையுடன் தற்போது கடையை நடத்திவருகிறார் என கூறப்படுகிறது.இது குறித்து ஏஐடியுசி டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் கூறும்போது கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தூத்துக்குடி டாஸ்மாக் நிர்வாகம் ஊழலில் சீரழிந்து வருகிறது ஆறுமுகநேரி டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் தூணை மேலாளர் உடந்தையுடன் ரூபாய் 1.86 கோடி அரசு பணம் கையாடல் செய்யப்பட்டுயிருப்பது வேதனைக்குரியது.விற்பனை பணம் ஆயிரம் குறைந்தாலே  ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த விஷயத்தில் கண்டும் காணாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.எனவே இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலிஸ் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை ஏஐடியுசி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...