தூத்துக்குடியில் சிவில் கேஷை கிரிம்னலாக மாற்ற பொதுபாதை அடைப்பு!வக்கில் தூண்டுதல்! காவல் துறை முறியடிப்பு.
ஷ்யாம் நியூஸ்
25.07.2020
தூத்துக்குடியில் சிவில் கேஷை கிரிம்னலாக மாற்ற பொதுபாதை அடைப்பு!வக்கில் தூண்டுதல் காவல் துறை முறியடிப்பு!
தூத்துக்குடி அருகே காலான்கரையை சார்ந்தவர் பொன்னுலிங்கம் 49 இவர் பஞ்சாயத்து அனுமதி இல்லாமலும் பக்கத்து நிலத்து உரிமையாளரிடம் நில அளவு
செய்து
செய்து
காட்டாமலும் கட்டுமான பணியை தொடங்கினார்.பக்கத்து நில உரிமையாளர் இது பற்றி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 22.07.2020 ல் இடத்தை அளந்து விட்டு கட்டுமானபணி தொடங்கவேண்டும் என்று புகார் அளித்தார்.புகார் மணுவை பெற்றுக்கொண்ட
உதவி ஆய்வாளர் இம்மானுவல் 24.07.2020
விசாரனை செய்தார்.விசாரனையில் இருதரப்பினர்க்கும் சமரசம் ஏற்படவில்லை .இரு தரப்பினரும் அடிதடி நடத்தினால் வழுக்கு பதிந்து கொள்கிறேன் .பொன்னுலிங்கம் அவரது வழக்கறிஞர் என்று வந்த செந்தில்குமாரிடமும் நீங்கள் உங்கள் கட்டுமான பணியை நடத்துங்கள் புகார்தாரரிடம் இது சிவில் வழக்கு நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என சி எஸ் ஆரை கொடுத்து முடித்து வைத்தார்.நீதி மன்றம் சென்றால் எங்கே கட்டுமானப்பணி நின்றுவிடுமோ என நினைத்த செந்தில்குமார் தனது கட்சிகாரரிடம் சிவில் கேஷை கிரிமினல் கேஷாக மாற்ற புகார் தரப்பினர் வீட்டிர்க்கு செல்லும் பொதுபாதை அடைக்க தூண்டியுள்ளார் இதன் பேரில் பொதுபாதையை அடைத்து கிரிமினல் கேஷ்க்கு பிரச்சனையை ஏற்படுத்தினர்.புகார்தாரர்
அதை படம் பிடித்து புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் க்கு அனுப்பி வைத்தனர்.ஆய்வாளர் வருவதை அறிந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.பின்பு ஆய்வாளர் இருதரப்பையும் அழைத்து பொதுபாதையை அடைப்பது தவறு என்றும் இருதரப்பினரும் சகோதரத்துவமாக இருங்கள் என்றும் நல்ல அறிவுரைகள் கூறி அனுப்பிவைத்தார்.