முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடிக்கு விடுதலை?


ஷ்யாம் நியூஸ் 
18.02.2019
ஸ்டெர்லைட் அரக்கனிடம் இருந்து தூத்துக்குடி மக்களுக்கு விடுதலை ?


ஸ்டெர்லைட் திறக்க  அனுமதி இல்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி  வட்டார பொதுமக்களும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்  ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர் .மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர் .22 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தில் மே 22 2018 அன்று  நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர் . ஆலை நிர்வாகத்தால் வெளி ஊர்களில் சம்பளத்துக்கு ஆள்பிடித்து  ஸ்டெர்லைட் திறக்கவேண்டும் என வாரம் வாரம் ஆட்சித்தலைவரிடம்  மனு அளிக்க ஏற்பாடு  செய்து வந்தனர் .இதனால் ஸ்டெர்லைட் எதிர்பாளர்களிடம் ஒருவிதமான அச்சம் இருந்துகொண்டு இருந்தது  ஆனால் மாவட்ட ஆட்சி தலைவர் திரு சந்தீப் நந்தூரி பொதுமக்கள் யாரும் ஸ்டெரிலைட் ஆலை திறந்துவிடுவார்கள் என்று அச்சமோ பயமோ கொள்ளவேண்டாம் என்று தொடர்ந்து கூறிவந்தார் .அதுபோல் இன்று ஆலை திறக்க அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால் தூத்துக்குடி மக்கள் முகத்தில் சந்தோச ரேகை பரவி உள்ளது .மற்றும் இன்று ஸ்டெர்லைட் நச்சு அரக்கனிடம் இருந்து தூத்துக்குடி மக்களுக்கு  விடுதலை கிடைத்து  கிடைத்திருப்பதாகவும் இந்த விடுதலை தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர் .ஆனால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பணம் வாங்கிக்கொண்டு தவறான தகவலை வெளியிட்டவர்களுக்கும் விளம்பர நிறுவங்களுக்கும் கமிஷனுக்கு ஆள்பிடித்த தரகர்களுக்கும் மிக பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது  என்றும் மக்கள் கருது தெரிவித்தனர் .ஆனால் அரசியல் ரீதியாக  முதன்முதலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது துணை செயலாளர் டி டி வி தினகரன் ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக  தூத்துக்குடில் பெரும் கண்டன போராட்டம் நடத்திய பின்புதான் வேறு வழியில்லாமல் மற்ற அரசியல் கட்சிகள்  ஆலைக்கு எதிராக கண்டன குரல் கொடுத்தனர் .இந்த வெற்றி மக்கள் போராட்டத்தினாலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மிக சரியாக செயல்பட்டதாலும் கிடைத்து உள்ளது அனால் இன்று பல அரசியல் கட்சிகள் தங்களால் கிடைத்தது என்று இனிப்புகள் வழங்கி வாக்கு அரசியல் செய்வதாகவும் மக்கள் குற்றம் சாட்டினார் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...