முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் அழைப்பு!

 ஷ்யாம் நீயூஸ் 25.09.2024 தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் அழைப்பு! தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று செப் -23  திரேஸ்புரம் பகுதி  தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் கேக் வெட்டி கொண்டாடினார். அனைத்து மக்களையும் மாநாட்டிற்கு  அழைக்கும் விதமாக ஆட்டோகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கினார்.மேலும் பொதுமக்களுக்கு தாகத்தை தணிக்கும் பொருட்டு மோர் வழங்கி சிறப்பித்தார். தூத்துக்குடி தெப்பக்குளம் அருகில் உள்ள truth full எனும் மனநலம் குன்றிய மற்றும் குழந்தைகள் காப்பகத்தில்  மதிய உணவு வழங்கப்பட்டது..இந்நிகழ்வு அனைத்தையும் திரேஸ்புரம் தமிழக வெற்றி கழக தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தூத்துக்குடி பிஜேபினர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

 ஷ்யாம் நீயூஸ் 25.08.2025 தூத்துக்குடி பிஜேபினர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்   தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையையேற்று பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர்.    இந்நிலையில் தூத்துக்குடி வடக்குமாவட்ட பிஜேபி கல்வியாளர் பிாிவு செயலாளர் கல்யாணசுந்தரம் மகளிர் அணியை சேர்ந்த மதிவாணி உள்பட 30க்கும் மேற்பட்ட பிஜேபியை சேர்ந்தவர்கள் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.     பின்னர் சால்வை அணிவித்து வாழ்த்து தொிவித்து கூறுகையில் திராவிட முன்னேற்றக்கழகம் 75 ஆண்டு பவள விழாவை கொண்டாடிய இயக்கமாகும். இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் தலைமையேற்ற நீங்கள் எல்லாம் கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் ஏராளம் உங்கள் பகுதிக்கும் நீங்கள் வைக்கும் கோாிக்கைகள் அனைத்தும் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எதிர்வரும் 2026ல...

26.09.24 அன்று தூத்துக்குடி டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

 ஷ்யாம் நீயூஸ் 24.09.2024 26.09.24 அன்று தூத்துக்குடி டாஸ்மாக் கடைகள் அடைப்பு! வரும் 26 9 24 அன்று வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட கடைகள் மூட தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவுக்கிணங்க தூத்துக்குடி மாவட்டம் மேலாளர் அய்யப்பன் கீழ்கண்ட 11 கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் டிப்டாப் போலி பெண் IAS மற்றும் பாஜக பிரமுகர் கைது.

 ஷ்யாம் நீயூஸ் 19.09.2024 தூத்துக்குடியில் டிப்டாப் போலி பெண் IAS மற்றும் பாஜக பிரமுகர் கைது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 18.09.2024 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் ஆக கல்வித் துறையில் செயலாளராக பணிபுரிவதாக போலியாக கூறி ஏமாற்ற  முயன்ற நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மங்கையர்கரசி என்ற பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த  நெல்லை மாவட்ட பாஜக இலக்கிய அணி தலைவர் ரூபி நாத் ஆகிய இருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் சிப்காட் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்களின் புகார்கள் குறித்த குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும் அந்த வகையில் 18.09.24 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது  இந்த கூட்டத்திற்கு டிப் டாப்பா...

தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு மண்டல பொதுமக்களில் குறைகளை கேட்டறிந்தார் மேயர் ஜெகன் பெரியசாமி!

 ஷ்யாம் நீயூஸ் 18.09.2024 தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு மண்டல பொதுமக்களில் குறைகளை கேட்டறிந்தார் மேயர் ஜெகன் பெரியசாமி! தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும்  மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி  தலைமையில் அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து  கொண்டு பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக  கிழக்கு மண்டலத்தில் இன்று(18.09.2024) முகாம் நடைபெற்றது     கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ( வார்டு எண்கள்  21முதல் 29,38 முதல் 41,46,47)   ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது  முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, ...

தூத்துக்குடி:இமானுவேல் சேகரன் நினைவு நாள் திருவுருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 ஷ்யாம் நீயூஸ் 11.09.2024 தூத்துக்குடி:இமானுவேல் சேகரன் நினைவு நாள் திருவுருவப்படத்திற்கு  கனிமொழி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்படுகிறது. தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட இமானுவேல் சேகரன் திரு உருவப்படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிஎம்.பி, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர்  கீதா ஜீவன் ,மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோரம்பள்ளம் குளத்தில் மூழ்கி புரோட்டா மாஸ்டர் பலி!

 ஷ்யாம் நீயூஸ் 06.09.2024 கோரம்பள்ளம் குளத்தில் மூழ்கி புரோட்டா மாஸ்டர் பலி!  தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற புரோட்டா மாஸ்டர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் மேல தட்டப்பாறை அம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் பெருமாள்(42) த/ பெ சிவன். இவரது தனது நண்பர்களுடன் கோரம்பள்ளம் குளத்தில் குளித்துள்ளார் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு புதுக்கோட்டை ஆய்வாளர் வனசுந்தரிடம் ஒப்படைத்தனர் உடலை கைப்பற்றிய புதுக்கோட்டை ஆய்வாளர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் . இவருக்கு மனைவி கவிதா பெண் குழந்தை சிவாசினி ஆகியோர் உள்ளனர் . இதுகுறித்து புதுக்கோட்டை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.