முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கடைக்கு மாதம் பத்தாயிரம் மாமூல் கேட்ட டாஸ்மாக் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி கலெக்டரிடம் டாஸ்மாக் பணியாளர் சங்கம் மனு !

 ஷ்யாம் நியூஸ் 

06.09.2021

ஒரு கடைக்கு மாதம் பத்தாயிரம் மாமூல் கேட்ட டாஸ்மாக் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி கலெக்டரிடம் டாஸ்மாக் பணியாளர் சங்கம் மனு !



தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளராக ஐயப்பன் பணியாற்றி வருகிறார் .இவர் அரசு மதுபான மேற்பார்வையாளர்களை புரோக்கர்களாக வைத்துக் கொண்டு மதுபான சில்லறை  விற்பனை கடை ஒன்றுக்கு மதம் பத்தாயிரம் மாமூல் வசூல் செய்வதாக தூத்துக்குடி டாஸ்மாக் ஏ ஐ டீ யூ சி சங்கதினர்   கலெக்டரிடம் மனு அளித்தனர் .மேலும் அந்த மனுவில் மாவட்ட  மேலாளர்  மேலாண்மை இயக்குனர் உத்தரவுகளை மீறி தற்காலிக பணியிடமாற்றம் என்ற ஆணைகளை தனக்கு வேண்டப்பட்ட பணியாளர்களிடம் விற்பனை  செய்கிறார் .கொரானா காலகட்டத்தில்  மூடப்பட்ட கடையில் மதுபுட்டிகளை விற்பனை செய்ததாக முதல் தகவல்  அறிக்கையில் பெயர் இல்லாத கடைப்பணியாளர்களை பணிநீக்கம் செய்துவிட்டு தனக்கு வேண்டப்பட்ட பணியாளர்களுக்கு (கடை எண் 9970)பணி ஆணை வழங்கியுள்ளார் மற்றும் கடை மேற்பார்வையாளர்களை புரோக்கர்களாக பயன்படுத்தி அணைத்து கடைகளிலும் மாதம்தோறும் சுமார் பத்து ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் மாமூல் வேட்டை வசூல் செய்து வருகிறார் மேல் அதிகாரிகளின் ஆணையை மதிக்காமல் மேற்பார்வைளர்களை தூண்டிவிட்டுபணியாளர்களை பணிசெய்யவிடாமல் தடுத்ததின் மூலம் சிவஞானபுரம் கடையில் பணியற்றிய  நாகராஜ் என்கின்ற ஊழியர் 23.07.2021 அன்று கலெக்டர் அலுவலகம் முன்பு  மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதை செய்திதாள்களில் வந்ததை எண்ணி  ஏ ஐ டீ யூ சி சங்கமும் தொழிலார்களும் மனஉளைச்சலில் உள்ளனர் .இது போன்று பல்வேறு குற்றச்சாட்டுகளை செய்து வரும் மாவட்ட மேலாளர் ஐயப்பன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது .டாஸ்மாக் ஏ ஐ டீ யூ சி மாநில துணை தலைவர் நெல்லை நெப்போலியன் தலமையில் ஆர்ப்பாட்டம் செய்து கலெக்டரிடம் மனு அளித்தனர் .மாவட்ட ஏ ஐ டீ யூ சி செயலாளர் இ.கிருஷ்ணராஜ் ,மாவட்ட ஏ ஐ டீ யூ தலைவர் பாலசிங்கம் ,சிரைவேல் ,மதுராகோட்ஸ் கிருஷ்ணமூர்த்தி ,வங்கி ஊழியர் சங்கம் சேது ,கட்டுமான பணியாளர் சங்கம் சுப்ரமணியன் ,மற்றும் ஏ ஐ டீ யூ சி டாஸ்மாக் நிர்வாகிகள் ,காளிமுத்து ,ராஜபாண்டி ,சகாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...