முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி உப்பாத்து ஓடை ஆக்கிரமிப்பு !அபாய நிலையில் 25 விவசாய கிராமங்கள் !சார் ஆட்சியர் ஆய்வு .

ஷ்யாம் நியூஸ் 
19.06.2020

தூத்துக்குடி உப்பாற்று ஓடை ஆக்கிரமிப்பு !அபாய  நிலையில் 25 விவசாய கிராமங்கள் !சார் ஆட்சியர் ஆய்வு .

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளம் ,பெட்டைக்குளம் உபரி நீர் செல்லும் உப்பாற்று ஓடையை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் விவசாயிகளுக்கு  பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குளத்தை சுற்றி உள்ள 25 விவசாய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது ஆக்கிரமிப்பை அகற்றி தர தூத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரியிடம் முள்ளக்காடு ,முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது .

கோரம்பள்ளம் குளம் ,பெட்டைக்குளம் சுமார் 2200 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி மாவட்டத்தின் மைய பகுதில் உள்ளது .இக்குளத்தில் மூலம் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் நெல் வாழை விவசாயங்கள் நடைபெற்று வருகிறது .இக் குளம் 1860 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு குளத்தின் உபரி நீர்  வெளியேற 48 மதகுகள் வைத்து அணை  கட்டப்பட்டது . காலப்போக்கில் அது 24 மதகுகள் வைத்து 330 மீட்டர் அகலம் 10 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. மழைகாலங்களில்  குளத்திற்கு வரும் காட்டு வெள்ளங்கள் இந்த உப்பாற்று ஓடைவழியாக  தூத்துக்குடி அனல் மின் நிலையம் அருகில் உள்ள கடலில் சென்று கலக்கும் .ஆனால்  தற்போது தனியார் நிறுவனங்கள் 300 மீட்டர் அகலம் உடைய ஓடையை  160 மீட்டராக சுருங்கும் அளவிற்கு ஆக்கிரமிப்பு 
செய்துள்ளனர் .இதனால் மழைக்காலங்களில் முள்ளக்காடு,அத்திமரப்பட்டி ,காலாங்கரை ,முத்தையாபுரம் ,வீரநாயக்கன்தட்டு உட்பட 25 க்கும் அதிகமான விவசாய கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கும்  அபாயம் உள்ளது .இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டின் மழையின் பொது தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது அனைவரும் அறிந்தது ..விவசாயிகளின்  ஆக்கிரமிப்பை அகற்றி தரவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற ஆட்சியர் உடனடியாக சார் ஆட்சியாளரை ஆய்வுக்கு அனுப்பினார் அதனை ஏற்ற சார் ஆட்சியர் (பயிற்சி )பிரித்திவ்ராஜ் (இ.ஆ.ப) உப்பாத்து ஓடையில் ஆய்வு நடத்தினார். பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகள் அவரை சந்தித்து ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை காண்பித்து அதை மீட்க வலியுறுத்தினர். 

ஆய்வின் போது, முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்க தலைவர் அழகுராஜா, பொருளாளர் சின்னக்குட்டி, 25 கிராம உப்பாத்து ஓடை விவசாய குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, ஜேஎஸ் நகர் சங்க நிர்வாகி முத்துகிருஷ்ணன், ராஜேந்திரன்,பெரியசாமி உட்பட பல  விவசாய உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...