முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஊர் தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு இளஞ்சிறாருக்கு 3 ஆண்டு நூதன தண்டனை..

ஷ்யாம் நீயூஸ் 05.12.25 ஊர் தலைவர்  படுகொலை செய்யப்பட்ட வழக்கு இளஞ்சிறாருக்கு 3 ஆண்டு நூதன தண்டனை. ஊர் தலைவர்  படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறாருக்கு 3 ஆண்டுகள் நூதன தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது தூத்துக்குடி மாவட்ட இளம் சிறார் நீதி குழுமம். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சுப்பையா(45). இவர் கல்லூரணி ஊர்த்தலைவராக இருந்துள்ளார். கடந்த 12.08.2008 அன்று கல்லூரணி ஊரில் உள்ள காளியம்மன் கோவில் கொடைவிழாவின் போது, ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த முருகன் என்ற சக்திவேல்முருகன் என்ற குச்சிமுருகன், முனியசாமி என்ற சின்னமுனியசாமி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்தனர். இதனை சுப்பையா கண்டித்து உள்ளார்.  தொடர்ந்து ஊர் கூட்டத்திலும் 3 பேரையும் சுப்பையா கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும், கடந்த 14.08.2008 அன்று சுப்பையா, அவரது மகன் ராஜாவுடன் குளத்தூர்-கல்லூரணி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பையா...
சமீபத்திய இடுகைகள்

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக்கூடாது.

 ஷ்யாம் நீயூஸ் 01.12.25 காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக்கூடாது.  டாஸ்மாக் பணியாளர் சங்கம் கூட்டமைப்பு கோரிக்கை!  தூத்துக்குடி மாவட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களே திரும்பப் பெற வேண்டும் என்ற திட்டத்தினை ஏற்க மறுத்து தூத்துக்குடியில் அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்கம்  கூட்டமைப்பு சார்பாக மாவட்ட மேலாளார் ஐயப்பனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில்   நிர்வாகத்தால் நியமிக்கப்படும் காலி பாட்டில் எடுக்கும் ஏஜென்ட், பார் ஒப்பந்ததாரர்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் காலி பாட்டில் சேகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் கடை பணியாளர்களை எந்த நிர்பந்தமும் செய்யக்கூடாது.  காலி பாட்டில் திரும்ப பெரும் ஒப்பந்ததாரர் அல்லது பார் உரிமையாளர் அந்தந்த கடை எண் உள்ள ஸ்டிக்கர்களை கடை பணியாளர்களிடம் ஒப்படைத்து  பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். பார் ஒப்பந்ததாரர் அன்றைய தினத்தில் வழங்கும் ஸ்டிக்கருக்கான தொகையினை மறுநாள் கடை திறந்த பின்பு வழங்கப்...

நவ.27ல் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்

ஷ்யாம் நீயூஸ் 21.11.25 நவ.27ல் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் வருகிற 27-ஆம் தேதி (வியாழக்கிழமை) வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது இதுகுறித்து நெல்லை வருங்கால வைப்புநிதி ஆணையாளர்-1 சிவசண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் நேரு நகரில் உள்ள நேரு நர்சிங் கல்லூரியிலும், தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி எஸ்.வி.நகரில் உள்ள எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள அன்னம்மாள் மகளிா் கல்வியியல் கல்லூரியிலும் நடக்கிறது. இதில், வருங்கால வைப்புநிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழில் அதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் ந...

ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது-உச்ச நீதிமன்றம்

 SHYAM NEWS 20.11.2025 ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது-உச்ச நீதிமன்றம்  மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கோ, ஆளுநருக்கோ காலக்கெடுவை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்றும், அப்படி செய்தால் கட்டுப்படுத்தப்பட்ட/ குறுகிய (limited) நீதிமன்ற மறு ஆய்வு செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்காவிட்டால், மசோதாக்கள் சட்டமாகிவிடும் என்று ஏப்ரல் மாதம் வழங்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் செயல்பட காலக்கெடு விதிப்பது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டிருந்த நிலையில், இந்த தீர்ப்பை இன்று (நவ. 20) உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. உச்ச நீ...

மாற்றுத்திறனாளி கிாிக்கெட் வீரா்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினாா்.

  ஷ்யாம் நீயூஸ் 20.11.2025 மாற்றுத்திறனாளி கிாிக்கெட் வீரா்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினாா்.     தூத்துக்குடி உலக மாற்றுதிறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு உலகின் முதலாவது உள்ளரங்கு ப்ரான்ச்சைஸ் சிட்டிங் கிரிக்கெட் டோர்னமென்ட் போட்டியை தூத்துக்குடி கோமதிபாய் காலணியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தமிழக மாற்று திறனாளிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சிறந்த சிட்டிங் கிரிக்கெட் வீரர்கள் எட்டு அணிகளாக ஏலத்தில்  தேர்ந்தெடுக்கப் பட்டு சம பலத்துடன் மோதினர். இது உலகின் முதன்முறையாகும்.      இது ட்ரயம்ப் புக் ஆப் வல்ட் ாிக்காட்ஸ் நிறுவனத்தாரால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை சான்றிதழ் வழங்கினார்.அமைச்சர் கீதாஜீவன் வழங்கி பேசுகையில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் விளையாட்டு துறையை பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக அளவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு வி...

அரசின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? கொடிகட்டி பறக்கும் ஊழல்!

 ஷ்யாம் நீயூஸ் 19.11.25 அரசின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? கொடிகட்டி பறக்கும் ஊழல்! கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்பது திருக்குறள். இதன் பொருள்ருள், கற்க வேண்டிய நூல்களை எந்தக் குறையும் இல்லாமல் கற்க வேண்டும், அப்படி கற்ற பிறகு, அந்த கல்விக்குத் தகுந்தபடி வாழ வேண்டும் என்பதாகும்.  ஆனால் இன்று  அப்படி இல்லை அத்தி பூத்தாற் போல் ஒரு சிலரை தவிர ஐஏஎஸ் போன்ற உயர் படிப்பு படித்து பணிக்கு வந்தாலும்  குறுகிய காலத்தில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதுதான் நோக்கமாக பலருக்கு உள்ளது. தூத்துக்குடி கூடுதல் ஆட்சியராக (பொறுப்பு) டி ஆர் டி ஏ ஐஸ்வர்யா IAS பணிபுரிந்து வருகிறார். இவர் துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது இதை தடுத்து நிறுத்த வேண்டிய இவர் தான் பணியில் சிறந்ததாக பணிபுரிவதாக படம் எடுத்து சமூக வலைதளங்கள் பதிவிட்டு தன்னை நேர்மையானவர் என்று காட்டிக் கொண்டு வருகிறார். ஆனால் இவர் கீழ் உள்ள துறையான ஊராட்சி ஒன்றியம் பஞ்சாயத்து என அனைத்து துறைகளிலும் தற்போது மலை போல் ஊழல் மலிந்து ஊழலுக்கே மதிப்பில்லாமல் போய்க் கொ...

தூத்துக்குடி 3 டாக்டர்கள் விபத்தில் பலி மேலும் 2 டாக்டர்கள் படுகாயம் .

ஷ்யாம் நீயூஸ் 19.11.2025   தூத்துக்குடி 3 டாக்டர்கள் விபத்தில் பலி மேலும் 2 டாக்டர்கள் படுகாயம் .  கோயம்புத்தூர், PN புதூர் சாஸ்திரி 1வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் சாரூபன் (23), புதுக்கோட்டை பரிசுத்தம்மன் மகன் ராகுல் ஜெபஸ்டியான் (23), திருப்பத்தூர் மந்தவெளி குறும்பேறியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முகிலன் (23), தூத்துக்குடி தெர்மல் நகர் ரவிக்குமார் மகன் கிறிஸ்டிகுமார் (23) மற்றும் சரண் (23) ஆகிய 5பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் 5 பயிற்சி டாக்டர்களும் காரில் புதிய துறைமுகம் கடற்கரைக்கு சென்றனர். காரை சாருபன் ஒட்டி சென்றுள்ளார். கார் பீச் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த மழை பெய்ததால் ரோடு சரியாக தெரியாததால் கார் நிலை தடுமாறி அருகிலுள்ள வேப்ப மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. 5பேரும் காருக்குள் சிக்கி கொண்டனர்  இது குறித்து அந்தப் பகுதியில் சென்ற மீனவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் உடனட...