முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும்! 600க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

 ஷ்யாம் நீயூஸ் 27.04.2023 ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும்! 600க்கும் மேற்பட்டோர்  முற்றுகை போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று 300 பெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வழக்கறிஞர் டாக்டர் மகாராஜன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் அமெரிக்கா மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் ஸ்டெர்லைட் மாதிரியான ஆலைகளை திறக்கவே முடியாது சுற்றுப்புற சூழலுக்கு பயங்கரமான கேடு விளைகின்ற ஆலை இந்த ஸ்டெர்லைட். இந்த ஆலையானது தாமிரம் ,கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் போன்றவற்றை தயாரிக்கிறது இவற்றை தயாரிக்கும் போது ஒரு டன் தாம்பரம் தயாரிப்பதற்கு இரண்டு கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியேறுகிறது அப்படி வெளியேற்றப்படும் போது காற்றில் கலக்கிறது அதை போல் மூன்று டன் திடக்கழிவு வெளியேறுகிறது திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது இல்லை என்றால் நீர் மேலாண்மை பாதிப்படைய செய்யும் இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு ...

பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

 ஷ்யாம் நீயூஸ் 22.04.2022 பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார். தூத்துக்குடி பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஹெரிடேஜ் பூங்காவில் வெப்பமயம் தடுக்கும் வகையில் பல்வேறு மரக்கன்றுகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நட்டினார். பின்னர் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் அதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் திணேஷ்குமார், மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சுமதி, உதவி ஆணையர் சேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், ஜான், காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியராஜ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் உள்பட பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுகாதார பணியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பாக்ஸ்: பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் பூமி வெப்பமயமாவதை தடு...

சிலுவைப்பட்டியில் நீர் மோர் பந்தலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்

ஷ்யாம் நீயூஸ் 22.04.2023  சிலுவைப்பட்டியில் நீர் மோர் பந்தலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைப்பட்டியில் தி.மு.க.வின் ஏற்பாட்டில் அமைத்திருந்த நீர் மோர் பந்தலை கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசனி, உள்ளிட்ட பல்வேறு குளிர்பானங்களை வழங்கினார்.      நிகழ்ச்சியில்; ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், பாலம்மாள், ஜெயசீலன், கிளைச்செயலாளர் அன்புரோஸ், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் தாமஸ், தி.மு.க பிரமுகர்கள் முத்து, கௌதம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கியில் தொழில் கடன் - கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

ஷ்யாம் நீயூஸ் 18.04.2022  மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கியில் தொழில் கடன் - கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள கூட்டுறவு ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள் முறை குறித்தும், அனைத்து பொருட்களும் நல்லமுறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா, என்பது குறித்தும் கலெக்டர் செந்தில்ராஜ் பணியாளர்களிடம் விரிவாக கேட்டறிந்து பொதுமக்களுக்கு தடையின்றி அனைத்து ரேசன் பொருட்களும் நல்லமுறையில் வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.  பின்னர், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கியில் அப்பகுதியில் உள்ள தாளமுத்து நகர், சவேரியார்புரம், பூப்பாண்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார வியாபார பிரமுகர்கள் தொழில் கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்திருந்தனர். தொழில் கடன் பலருக்கும் வழங்கப்பட்டு, இந்த வங்கியின் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாத தொழில் கடனாக 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் காசோலையை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.  விழாவில், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கி தலை...

தூத்துக்குடி 40வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

 ஷ்யாம் நீயூஸ் 05.04.2023 தூத்துக்குடி 40வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட தெற்கு காட்டன் சாலையில் அமைச்சர் கீதாஜீவனிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதில் காந்திநகரில் வீட்டுத்தீர்வை, குடிநீர், இணைப்பு, நீண்டகாலமாக வழங்கப்படாமல் இருப்பதை நிறைவேற்றி தர வேண்டும். விதவைப்பெண் அரசு உதவித்தொகை வேண்டி மனு அளித்தனர். லயன்ஸ்டவுன் பகுதியில் கடந்த ஜனவரி 13ம் தேதி அனிசா என்ற பெண் இறந்தார். இதில் மர்மம் இருக்கிறது என்று அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் மருத்துவமணை பரிசோதனையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுவரை அந்த கொலைக்கு காரணமா...