முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் ஆணையம் கண்ணில் மண்ணள்ளி போட்டுவிட்டு பேட்டி பெட்டியாக மது கடத்தல் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைகளில் பல லட்சம் பணம் ?

 ஷ்யாம் நியூஸ் 

05.04.2021

தேர்தல் ஆணையம் கண்ணில் மண்ணள்ளி போட்டுவிட்டு பேட்டி பெட்டியாக மது கடத்தல் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைகளில் பல லட்சம் பணம் ?



நாளை  ;நடைபெற உள்ள சட்டமற்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 4,5,6 தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டது .மூன்று நாள் விடுமுறை என்பதால் மது பிரியர்கள் மூன்று நாட்களுக்கு தேவையான மது புட்டிகளை வாங்க மது  கடைகளில் அலைமோதினர் .ஆனால் டாஸ்மாக் நிர்வாகமோ ஒருமதத்தில் நடைபெற்ற மது விற்பனையில் ஒரு நாளுக்கு வரும் சராசரி விற்பனையில் 30% மட்டுமே அதிக விற்பனை செய்யலாம் மீறினால்  துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்  என்ற அணையை வெளியிட்டது

ஆனால் நடந்ததோ வேறு இதை சாதகமாக பயன்படுத்திய டாஸ்மாக் அரசியல் தொழிற் சங்க தலைவர்கள் தங்கள்  கட்டுப்பாட்டில் உள்ள மேற்பார்வையாளர்களிடம் அதிகம் விரும்பி பார்க்கும் குறைந்த விலை மது புட்டிகளை விற்பதை நிறுத்திவிட்டு 90 நாட்களுக்கு மேல் உள்ள பழைய விலை உயர்வான மது புட்டிகளை விற்பனை செய்ய வற்புறுத்தியுள்ளனர் .இதன் காரணமாக ரூபாய் 120 உள்ள மது புட்டிகள் கடைகளில் இல்லை என கூறி மது பிரியர்களை விலை உயர்வான மது புட்டிகளை வாங்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர் . மற்றும் மலை 6 மணிக்கெல்லாம் விற்பனை கணக்கு எடுக்கப்பட்டு ஒருநாளுக்கு வரவேண்டிய சராசரி விற்பனை பணத்தை கணக்கிட்டு தேர்தல் ஆணையத்திற்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக அரசு ஆணையில்  கூறப்பட்ட 30% விற்பனை பணத்தை கூட்டி மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் சீல் வைத்த கவரில் ஒப்படைத்துள்ளனர் .

அதன் பின்   இரவு நேரத்தில் குறைந்த விலை மது பெட்டிகளை அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு ஒரு மது பாட்டிலுக்கு  20 முதல் 30 ரூபாய் கூடுதலாக விலை வைத்து  பெட்டியை கொடுத்து அனுப்பியுள்ளனர் .இதன் மூலம் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் ஒரே நாளில் பல லட்சம் சம்பாதித்துள்ளனர் .

சராசரி விற்பனையை விட 5 மடங்கு கூடுதல் விற்பனை பணத்தை தற்போது கையில் வைத்திருக்கும் மேற்பார்வையாளர்கள் தேர்தல் முடிந்த 7 தேதி விற்பனை என்று வரும் 8 ம் தேதி வங்கியில் செலுத்த திட்டமிட்டுள்ளனர் .

தேர்தல் சுமுகமாக நடை பெற வேண்டும் என்பதற்ககாக தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைளை எடுத்தாலும் இன்று 120 ரூபாய் மது புட்டிகள் 250 ரூபாய்க்கு கள்ள சந்தையில் விற்கப்படுவதாக மது பிரியர்கள் தெரிவிக்கின்றனர் .

மற்றும் டாஸ்மாக் கடை திறக்கும் 7 ம் தேதி 12 மணிக்கு முன்பாக அணைத்து டாஸ்மாக் கடைகளையும் சோதனை செய்தால் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு  பார் உரிமையாளர்களுக்கு  குறைந்த விலை மது பெட்டிகளை  கடத்தியது தெரியவரும் என தகவல் தெரிந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...