முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தலையாரி-பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் 1கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தலையாரி ஏகாந்தலிங்கம். இவர் ஆரம்ப காலம் தொட்டு இப்பகுதி தலையாரியாக பணிபுரிந்து வருகிறார் . இவர் கோரம்பள்ளம் கிராமம் 1பகுதியில் உள்ள புறம்போக்கு நிலம். விவசாய நீர்நிலை கால்வாய்கள் ஆக்கிறமிப்பு செய்து கட்டிடம  கட்டியதை புதிதாக வரும் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் தெறிவிக்காமல் மறைப்பது,விவசாயம்கோரம்பள்ளம் குளத்தில் இருந்து கரிசல் மண் இலவசமாக விவசாயிகளுக்கு

வி ஏஓ பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிக்க கோரிக்கை!

ஷயாம்நீயுஸ்  28.08.2019 விஏஓ பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிக்க வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாநில செயலாளர் ரெங்கராஜ், மாவட்ட தலைவர் சின்னதங்கம், மாவட்ட செயலாளர் சுப்பையா ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், "காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. அந்த காலிப் பணியிடஙக்ளை ஏற்கனவே மனு செய்துள்ள, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி வழங்கிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலனை மாற்ற அதிமுக நிர்வாகிகள் முயற்சி?

ஷ்யாம் நியூஸ் 13.08.2019 தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலனை  மாற்ற அதிமுக நிர்வாகிகள் முயற்சி ? தமிழகத்தில் தற்போது வேகமான முன்னேற்றம் அடைந்துவரும் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டமாகவும்.அதற்கு இளம் IAS மற்றும் IPS அதிகாரிகளின் கடும் உழைப்பே ஆகும்.நேர்மையான அதிகாரிகளை எப்போதும் அரசியல்வாதிகளுக்கு பிடிப்பது இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை மாற்ற தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம்  அழுத்தம் கொடுத்துள்ளனர். தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி வருவதையொட்டி பழைய பஸ்நிலையம் இடிப்பது சம்மந்தமாக 15லட்சம் டெண்டர் விடப்பட்டது ஆனால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிண்டிகேட் அமைத்து 15லட்சம் டெண்டரை 5லட்சத்திற்க்கு எடுத்து அதையே 31லட்சத்திற்கு கைமாத்திவிட்டதால் ஆணையர் பழைய பஸ்நிலையத்தை இடிப்பதற்கான ஆணையை வழங்கவில்லை என தெறிகிறது. மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சைக்கிள் ஸ்டான்டையும் அரசே நடத்தும் என்ற தகவலும் தெறிகிறது ஆகவே ஆணையர் நேர்மையாய் இருப்பதால் ஒன்றும் செய்ய முடித அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் சேர்ந்து ஆ...

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி -கீதாஜீவன் எம்எல்ஏ ஆய்வு!

ஷ்யாம் நியூஸ் 12.08.2019 தூத்துக்குடி பேருந்து நிலையம் பணிகளை கனிமொழி எம்பி - கீதாஜீவன் எம்எல்ஏ ஆய்வு தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பழைய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகளை கனிமொழி எம்பி - கீதாஜீவன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பழைய பேருந்து நிலையப் பணிகளை கனிமொழி எம்பி, கீதாஜீவன் எம்எல்ஏ ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவமனையில் அவசர கால சிகிச்சை பிரிவில் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள், நோயாளிகளின் தேவைகள், குறைகளை கேட்டறிந்தனர். முன்னதாக அரசு மருத்துவமனைக்கு வந்த கனிமொழி எம்பியை மருத்துவ கல்லூரி முதல்வர்  ராமசுப்பிரமணியன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி உறைவிட மருத்துவர் இன்சுவை, டாக்டர் பாலவன் மற்றும் மருத்துவர்கள் வரவேற்றனர்  தொடர்ந்து அவர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும்  தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஸ்மார்ட்...

35ஏ: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு என்ன? 5 கேள்வி பதில்கள்..

SHYAM NEWS 06.08.2019 35ஏ: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு என்ன? 5 கேள்வி பதில்கள்... தை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்    பகிர மின்னஞ்சல படத்தின் காப்புரிமை காஷ்மீர் மக்களுக்கு சிறப்புரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 35-ஏ தொடர்பான சர்ச்சை பல பதிற்றாண்டுகளாக நீடிக்கிறது. இது தொடர்பான சில முக்கியத் தகவல்கள்: 35-ஏ என்ன சொல்கிறது? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 35-ஏ காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கியுள்ளன. அதன்படி, காஷ்மீர் மாநில மக்களே அங்கு நிரந்தர குடிகள். எனவே, வெளிமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் எந்தவொரு அசையா சொத்தையும் வாங்க முடியாது; மாநில அரசின் நலத்திட்டங்களால் பயனடைய முடியாது. படத்தின் காப்புரிமை இந்த பிரிவின் கீழ் யாரெல்லாம் அடங்குவர்? இந்த சட்டப்பிரிவு அமலுக்கு வந்த நாளான மே 14, 1954 முதல் இருந்து அங்கு யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள். மேலும், அப்போதில் இருந்து 10 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் ஜம்மு...

முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்;ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல்!

ஷ்யாம் நியூஸ் 01.08.2019 முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது அதகுறித்தெல்லாம் நடவடிக்கை மேற் கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த பயனும் தந்திடாத முத்தலாக் விசயத்தை கையில் எடுத்து கொண்டு  பாராளுமன்றத்தில் 30-07-2019 செவ்வாய் கிழமை அன்று முத்தலாக் தடை சட்டத்தை அவசரமாக நிறை வேற்றிய மத்திய பா ஜ க அரசின் இத்தகை செயல் இஸ்லாமிய சமுதாயத்தை பழி வாங்கும் செயலாகும். முத்தலாக் , இஸ்லாமிய பெண்களை பாதிக்கின்றது என்று இவர்கள் சொல்லு முத்தலாக் கொடுக்கும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அறிவித்துள்ளார்கள் . சிவில் சட்டத்தை கிரிமினல் சட்டமாக்குவது ஜனநாயக மரபல்ல சிறுபான்மையினரின் மத உரிமைகளில் தலையிடுவது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறிச்செய்யும் சட்ட முரனாகும் . எனவே : முத்தலாக் தடை சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் மென ஜனநாயக மக்க...