முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரெட்’ கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது ஆக்‌ஷன் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வாதம்

 SHYAM NEWS 20.02.2024 ரெட்’ கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது ஆக்‌ஷன் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரெட் கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை இல்லை என வேதாந்தா தரப்பு வாதம் வைத்துள்ளது. தூத்துக்குடியில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல் போராட்டம் நடைபெற்றது. இது, பெரும் போராட்டமாக வெடித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018, மே 28 முதல் இந்த ஆலை மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து, தடை உத்தரவை நீக்கி மீண்டும் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் சுமார் 10,000 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள...

தூத்துக்குடியில் மின் மோட்டார் சுவிட்சை போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 05.02.2024 தூத்துக்குடியில் மின் மோட்டார் சுவிட்சை போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.  தூத்துக்குடி அண்ணா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சரவண பெருமாள் மனைவி செல்வி (61), இவர் நேற்று மாலை வீட்டில் மின் மோட்டார் சுவிட்சை போட்டபோது எதிர்பாராத அவரது உடலில் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல்! போலீசார் கைது!

ஷ்யாம் நீயூஸ் 05.02.2024 தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு  சாலை மறியல்! போலீசார் கைது! தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் ஏஜசிசிடியூ தொழிலாளர்கள் மாநிலத் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது கீழ்க்கண்ட கோஷங்களை வலியுறுத்தினர் தேர்தல் வாக்குறுதி படி தமிழக அரசு சுமைதூக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். 2011ம் ஆண்டு வரன்முறைப்படுத்தபட்டு 2020 ஆண்டு பச்சை அட்டை பெற தகுதி படைத்த  3525 தொழிலாளர்களுக்கும் 2020 ஆம் ஆண்டு முதல் பச்சை அட்டை வழங்க வேண்டும்.வார விடுப்பு ஊதியத்தை அந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.பணிவேட்டில்2020லிருந்து  பதிவு செய்ய வேண்டும். 2019 ஆம் ஆண்டில் இருந்து பணி செய்துவரும் சுமந்து தூக்கும் தொழிலாளர்களை அரசு உத்தரவுபடி வறைமுறைபடித்தி பி எப் பிடித்தம் செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத அவுட் சோர்ஸ் முறையை கைவிட வேண்டும். வாகனங்களில் ஓவர்லோடு ஏற்ற இறக்க சுமைதூ...

காம்பவுண்ட் சுவர் மீது அரசு பள்ளி கட்டிடம் !

 ஷ்யாம் நீயூஸ் 05.02.2024 காம்பவுண்ட் சுவர் மீது அரசு பள்ளி கட்டிடம்  கட்டி வருதல்  கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் காலான்கரை.இங்கு ஐந்தாம் வகுப்புவரை உள்ள பள்ளி உள்ளது.ஐம்பதுக்கும் அதிகமான மாணவ குழந்தைகள் பயின்று வருகின்றனர்.பள்ளியை சுற்றி ஐந்து அடி உயரத்தில் சுற்று சுவர் உள்ளது.தற்போது மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் கூடுதல் கட்டிடம் கட்ட அரசு 7 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த பணத்தை கையாடல் செய்ய நினைத்த  ஒப்பந்ததாரர் ஏற்கனவே கட்டிய பள்ளியின் சுற்றுசுவர் மீது மீதி கட்டத்தை கட்டி வருகிறார்.இவ்வாறு கட்டும் கட்டிடத்தால் தங்கள் குழந்தைகளுக்கு ஆபத்து வரலாம் என குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் பொறியாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது.அப்படியா இடித்து கட்ட சொல்கிறேன் என்று கூறினார்.ஆனால் இது வரை முறையாக நடைபெறவில்லை .இதுவரை கட்டிடம் கட்டிய செலவு அதை இடிக்கும் செலவு ஆகியவற்றுக்கு மீண்டும் பஞ்சாயத்து அலுவலகம் நிதி ஒதுக்கீடு செய்யுமா அல்லது ஏ...