முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் மதுக்கடை இல்லாத வாடாக மாற்ற வேண்டும் அதிமுக கவுன்சிலர் மேயருக்கு கோரிக்கை!

ஷ்யாம் நியூஸ் 30.08.2023  தூத்துக்குடியில் மதுக்கடை இல்லாத வாடாக மாற்ற வேண்டும் அதிமுக கவுன்சிலர் மேயருக்கு கோரிக்கை! தூத்துக்குடி மாநகராட்சி  சாதாரண கூட்டம் இன்று(30.08.2023)  மாநகராட்சி கூட்ட அரங்கில்   மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.   மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினரும் , மாநகராட்சி அதிமுக எதிர் கட்சி கொறடாவுமான மந்திரமூர்த்தி பேசுகையில்... தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்  ஜாதியின் பெயரில் எந்த சாலையும் இல்லாத வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாதியின் பெயரில் உள்ள தெருக்களை உடனடியாக  தேசதலைவரின் பெயரில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தூத்துக்குடி  51 வது வார்டில் செயல்பட்டு வரும். இரண்டு டாஸ்மார்க் கடைகளையும் அகற்றி மது இல்லாத  வார்டாக  51 வது வார்டை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  தூத்துக்குடி மாநகர பகுதியில் மதுவால் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் குடும்பம...

அதிமுக கரைவேட்டியை கட்டுவதற்கு ஓபிஎஸ்க்கு உரிமையில்லை! தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர் எஸ் பி சண்முகநாதன் பேட்டி.

 ஷ்யாம் நியூஸ் 25.08.2023 அதிமுக கரைவேட்டியை கட்டுவதற்கு ஓபிஎஸ்க்கு உரிமையில்லை! தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர் எஸ் பி சண்முகநாதன் பேட்டி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின்னர் அதிமுக தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும் என பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதற்கு ஓபிஎஸ் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தானர். ஆனால் அதிகமான மாவட்ட செயலாளர்கள் ஒற்றைத் தலைமையை ஏற்று எடப்பாடி தலைமையில் அதிமுக ஒற்றை தலைமையில் இயங்கும் என பொது குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. அதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் பலமுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று வந்த தீர்ப்பில் பொதுக்குழு எடுக்கம் முடிவு  செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சண்முகநாதன் கூறுகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற போது அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஆதரித்தனர் அதேபோல் தலைமை...

தூத்துக்குடியில் வரும் 4,5 தேதிகளில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும். ஏ.ஜ.டீ.யூசி.தொழிற்சங்கம் கோரிக்கை !

 ஷ்யாம் நீயூஸ் 02..08.2023 தூத்துக்குடியில் வரும் 4,5 தேதிகளில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும். ஏ.ஜ.டீ.யூசி.தொழிற்சங்கம் கோரிக்கை ! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகரில் ஆகஸ்ட் மாதம் 4 ,5 ம் தேதிகளில்   உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா திருவிழாவும்   தங்கத்தேர்  பவனியும்   நடைபெற உள்ளது.இந்த திருவிழாவிறக்கு  தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஜாதி மதம் இன்றி பனிமய மாதா  திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் மக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு தங்கத்தேர் பவனி உலா வர இருப்பதால்  தேர் திருவிழாவை காண பல லட்சம் மக்கள் தூத்துக்குடி நகரில்  ஒன்று கூட உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 4,5 தேதிகளில் மூட ஆணையிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திறக்கு டாஸ்மாக் ஏ.ஜ.டீ.யூ.சி பணியாளர்  சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் மனு அளித்தார் .உடன் தூத்துக்குடி டாஸ்மாக் ஏ.ஜ.டீ.யூ.சி பணியாளர் சங்கம் நிர்வாகிகள் ராஜபாண்டி முருகன் மற்றும்...