முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பிராமணர்கள் ஆதிக்கம் ராஜ்யசபா எம்பி குற்றஞ்சாட்டு

 ஷ்யாம்  நீயூஸ்  23.12.21 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பிராமணர்கள் ஆதிக்கம் ராஜ்யசபா எம்பி குற்றஞ்சாட்டு! உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பிராமணர்கள் ஆதிக்கம் இருப்பதாக ராஜ்யசபாவில் கேரளாவை சேர்ந்த புதுமுக எம்.பியான ஜான் பிரிட்டாஸ் குற்றம்சாட்டினார். கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் புதுமுக எம்.பி.யுமான ஜான் பிரிட்டாஸ்  ராஜ்யசபாவில் பேசியதாவது: இந்தியாவில் இதுவரை 47 பேர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர். இவர்களில் 14 பேர் பிராமணர்கள். பிராமணர் ஆதிக்கம் 1950-ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த 14 பேரில் 11 பேர் பிராமணர்கள். 1980-ம் ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியாமல் போனது ஏன்? உலகத்திலேயே நீதிபதிகள் நியமனம் இந்த அளவு ரகசியமானதாக எங்கேனும் இருக்கிறதா? நீதித்துறையின் சுதந்திரத்தை தற்போதைய நீதிபதிகள் நியமன முறை (கொலீஜியம், கொலிஜியம்) கேள்விக்குள்ளாக்குகிறது. தகுதியான நீதிபதிகளை கண்டறிந்து நியமிக்க நீதித்துறையில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. நீதிபதி ...

தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் வாலிபர் சடலம்

 ஷ்யாம் நீயூஸ் 23.12.2021 தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் வாலிபர் சடலம்.  தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் வாலிபர் சடலம் மிதந்தது .முத்துக்குமார் வயது 24 தந்தை பெயர் ஏக மூர்த்தி முனிசாமி நகர் தூத்துக்குடியை சேர்ந்தவர் இவர் இன்று காலை  பேன்ட் சட்டையுடன் குளத்தில்  இறந்து கிடந்தார் தகவலறிந்த கோரம்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி புதுக்கோட்டை காவல் துறை மற்றும் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் இதனடிப்படையில உடலை கைப்பற்றிய புதுக்கோட்டை காவல்துறையினர் வாலிபரின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் மற்றும் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபரின் இருசக்கர வாகனம் காலாங்கரை பெரியநாயகிபுரம் சந்திக்கும் இடத்தில் அருகில் நடுச்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது .தொடர்ந்து கோரம்பள்ளம் குளத்தில் மரணங்கள் ஏற்பட்டு வருவது சுற்றி இருக்கிற கிராம மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

2020- 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்

 ஷ்யாம் நீயூஸ்  10.12.2021 2020- 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார். 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு 07.12.2021அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  தலைமையில் தனிவிரல் ரேகை பதிவு செய்தல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வாகியுள்ள 85 பெண்கள், 225 ஆண்கள் என மொத்தம் 310 பேருக்கு  (07.12.2021) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆறுமுகநாடார் ராஜம்மாள் திருமண மஹாலில் தனிவிரல் ரேகை பதிவு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பேசுகையில் காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற நீங்கள் தேர்வாகியுள்ளீர்கள். ...

தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு

 ஷ்யாம் நீயூஸ்  02.12.2021 தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு! தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழை பாதித்த இடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மழை பாதிப்புகளை பார்வையிட சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நண்பகல் 1.40 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தடைந்தார். தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட  மழை பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்டார். தேங்கிய தண்ணீரில் நீண்ட  தொலைவு நடந்து சென்று பார்வையிட்ட அவர் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அந்தப் பகுதியில் திரண்டிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். ஆய்வின்போது, தூத்துக்குடி மக்களவை...