ஷயாம் நியூஸ் 19.02.2019 ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்பு ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது . தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டூம் திறக்க தேசிய பசுமை திர்ப்பாயம் உத்தரவுவால் தூத்துக்குடி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது . ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் தேசிய பசுமை திர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையிடு செய்து சட்டம் ரீதியான போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை செய்து தேசிய பசுமை திர்ப்பாய உத்தரவும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .மேலும் இந்த தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் உயிரிழந்த தூத்துக்குடியின் மண்ணிண் மைந்தர்களின் தியாகத்திற்கு கி...