ஷ்யாம் நீயூஸ் 23.11.2023 அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு -அமைச்சர் கீதா ஜீவன். தமிழகம் முழுவதும் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக இரவு-பகல் என்று மழை பெய்து வருகிறது. இது ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை சீர்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பொதுமக்களின் பாதிப்புகளை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் உடனடியாக களமிறங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பேரிடர் மேலாண்மை மீட்பு குழு மட்டுமின்றி அதிகாரிகள் உள்பட அரசு ஊழியர்களும் இரவு-பகல் பாராமல் மழைநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஒவ்வ...