முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொலை குற்றவாளியை தப்பிக்கவிட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் உறவினர் புகார் மனு!

 ஷ்யாம் நியூஸ் 30.06.2020 கொலை குற்றவாளியை தப்பிக்கவிட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி SP யிடம்புகார் மனு! முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தை சார்ந்த வெள்ளரிக்காய் வியாபாரி சுப்பையா என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை தப்பிக்கவிட்டதாக முத்தையாபுரம் ஆய்வாளர் அன்னராஜ் மீது சுப்பையாவின் உறவினர் STC கனியம்மாள் மாவ்ட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அளித்த புகார்மனுவில் எனது உறவினர் சுப்பையா கொலை வழக்கில் கைதுசெய்யபட்டவர்களில் முக்கிய குற்றவாளியான சித்ரா(A5) என்பவரை முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் சட்டத்திற்கு முறனாக பணம் பெற்றுக்கொண்டு தப்பிக்க விட்டுள்ளார்.எனவே ஆய்வாளர் அன்னாராஜ் இந்த வழக்கை புலன் விசாரனை செய்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்துவிடுவார் மேலும் குற்றவாளி சித்ராவால் பாதிக்கப்பட்ட எங்களை மிரட்டும் சூழல் உள்ளது எனவே குற்றவாளி சித்ராவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் அன்னராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும் புதிய ஆய்வாளர...

தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக ஜெயக்கொடி பதவியேற்ப்பு!

ஷ்யாம் நியூஸ் 29.06.2020 தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக ஜெயக்கொடி பதவியேற்ப்பு! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் ஜெயக்கொடி தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவியேற்றார்.இதனை தொடர்ந்து காலான்கரை திமுக கிளை செயலாளர்கள் ராஜ், ராமசந்திரன், முத்துப்பாண்டி மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தந்தை மகன் சாவு போலீசை கண்டித்து தூத்துக்குடியில் முழு கடையடைப்பு

ஷ்யாம் நியூஸ் 24.06.2020 தந்தை மகன் சாவு போலிசை கண்டித்து தூத்துக்குடியில் முழு கடையடைப்பு சாத்தான்குளத்தில் தந்தை மகன்  கோவில்பட்டி கிளைசிறையில் இறந்த சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்தை சம்பவத்தால் சாத்தான்குளம் முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை வேண்டும், அவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.அதன்படி இன்று தூத்துக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான சாத்தான்குளம், ஆத்தூர், நாசரேத், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப...

தூத்துக்குடி உப்பாத்து ஓடை ஆக்கிரமிப்பு !அபாய நிலையில் 25 விவசாய கிராமங்கள் !சார் ஆட்சியர் ஆய்வு .

ஷ்யாம் நியூஸ்  19.06.2020 தூத்துக்குடி உப்பாற்று ஓடை ஆக்கிரமிப்பு !அபாய  நிலையில் 25 விவசாய கிராமங்கள் !சார் ஆட்சியர் ஆய்வு . தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளம் ,பெட்டைக்குளம் உபரி நீர் செல்லும் உப்பாற்று ஓடையை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் விவசாயிகளுக்கு  பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குளத்தை சுற்றி உள்ள 25 விவசாய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது ஆக்கிரமிப்பை அகற்றி தர தூத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரியிடம் முள்ளக்காடு ,முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது . கோரம்பள்ளம் குளம் ,பெட்டைக்குளம் சுமார் 2200 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி மாவட்டத்தின் மைய பகுதில் உள்ளது .இக்குளத்தில் மூலம் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் நெல் வாழை விவசாயங்கள் நடைபெற்று வருகிறது .இக் குளம் 1860 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு குளத்தின் உபரி நீர்  வெளியேற 48 மதகுகள் வைத்து அணை  கட்டப்பட்டது . காலப்போக்கில் அது 24 மதகுகள் வைத்து 330 மீட்டர் அகலம் 10 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. மழைக...