முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்சயாத்து தலைவர் வேட்பாளருக்கு செலவு செய்யும் ஸ்டெர்லைட் நிர்வாகம் ?

SHYAM NEWS   25.12.2019 பஞ்சயாத்து தலைவர் வேட்பாளருக்கு செலவு செய்யும் ஸ்டெர்லைட் நிர்வாகம் ? கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில்  தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் .அதனை தெடர்ந்து ஆலைக்கு  தமிழக அரசு சீல் வைத்து அடைக்க உத்தரவிட்டது .அதனை தொடர்ந்து ஆலை நிர்வாகம் ஏழை மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி ஆலையை திறக்க சொல்லி அவர்களை போராட தூண்டிவிட்டது அது நடக்கவில்லை .தற்பொழுது பஞ்சாயத்து தேர்தல் நடக்க இருப்பதால் ஆலையை சுற்றி உள்ள பஞ்சயாத்து தலைவர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செலவு செய்துவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் .குறிப்பாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அய்யநடப்பு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மனைவிக்கும் ஆளும் கட்சி நிர்வாகி  மனைவிக்கும் சுமார் 50 லட்சம் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும்  இருவரில் யார் பதவிக்கு வந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீர்மானம் நிறைவேற்றி தர வேண்டும் என உடன்படிக்கை செய்து உள்ளனர் எனவும்  ஸ்டெர்லைட் ஆலை எதிப்பு கூட்டமைப்புப்பை சார்ந்தவர்கள்  குற்றம் சுமத்துகின்றனர் ....

தூத்துக்குடி அருகில் பெண் சிசு உடல் தோண்டி எடுப்பு:தாசில்தார் முன்னிலையில் பரிசோதனை!!!

ஷ்யாம் நீயூஸ்  18.12.2019 தூத்துக்குடி அருகே புதைக்கப்பட்ட பெண் சிசு உடல் தோண்டி எடுப்பு: தாசில்தார் முன்னிலையில் பரிசோதனை!! தூத்துக்குடி அருகே பாலியல் பலாத்காரத்தால் மாணவிக்கு பிறந்த குழந்தை புதைக்கப்பட்ட விவகாரத்தில், இன்று அந்த குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.  தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கீழத்தெருவை சேர்ந்த டி.வி. மெக்கானிக் ராஜூ (48) என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை மாணவியின் குடும்பத்தினர் வீட்டின் பின்புறத்தில் புதைத்தனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். மேலும் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதா? என சிறுமியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தூத்துக்குடி த...

குடியுரிமை மசோதாவை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் ஆர்பாட்டம்! ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கைது!

ஷ்யாம் நீயூஸ் 16.12.2019 குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து தூத்துக்குடியில் ஆர்பாட்டம்! தூத்துக்குடியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை சட்ட  மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி  தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைதுசெய்து தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.